Friday 17th of May 2024 01:15:48 AM GMT

LANGUAGE - TAMIL
.
பெண்ணொருவரைக் கத்தியால் குத்திய முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!

பெண்ணொருவரைக் கத்தியால் குத்திய முன்னாள் இராணுவச் சிப்பாய் கைது!


கொழும்பு, அங்கொடை சந்திக்கு அருகில் பெண்ணொருவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரை முல்லேரியா பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில், முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த 32 வயது பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கொடை சந்திக்கு அருகில், பொதுமக்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சந்தேகநபர் குறித்த பெண்ணைக் கூரிய கத்தியால் குத்தியுள்ளார்.

இதையடுத்து குறித்த நபர் தப்பிச் செல்ல முயன்ற நிலையில், பொதுமக்களின் உதவியுடன் பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கொழும்பு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE